ஊரடங்கு தளர்வுகள், 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு எப்போது? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை
சென்னை :-
பல மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் தமிழக அரசு அறிவித்துவரும் நிலையில், தற்போது மேலும் தளர்வு குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
இன்று மதியம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் துறைசார்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாலும் மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது என தெரிகிறது. கூடுதல் தளர்வுகள் அடங்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை எப்போது திறப்பு என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து கேள்விகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அதற்கான தெளிவான முடிவுகளும் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply