அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்படும் – கலெக்டர் அறிவிப்பு
சென்னை :-
காந்தி ஜெயந்தி முன்னிட்டு நாளை 2-10.2021 சென்னையில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்படும் என சென்னை கலெக்டர் விஜயாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மதுபானக்கடைகள் நாளை மூடல்
இதனைத் தொடர்ந்து, வரும் 19 ஆம் தேதி அன்று மிலாதுநபி தினத்தன்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என அனைத்து பார்களும் மூடப்பட வேண்டும் என சென்னை கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
நடவடிக்கை பாயும்
மீறி மதுபானங்களை விற்பனை செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.