ஆந்திரா மாநில எல்லைப் பகுதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் மலைகிராம மக்களின் வசதிக்காக சுமார்  ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்

Share Button
ஆந்திரா மாநில எல்லைப் பகுதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் மலைகிராம மக்களின் வசதிக்காக சுமார்  ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரட்டனப்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள பூங்குருத்தி மற்றும் மேல் பூங்குருத்தி ஆகிய இந்த கிராமங்கள் ஆந்திரா மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்த கிராமம் மலையில்  அமைந்து இருப்பதால் போதிய சாலை வசதிகள் இன்றி மிகவும் அவதிப்பட்டு வருவதால் இந்த கிராமங்களுக்கு சாலை வசதி செய்துக் கொடுக்க வேண்டும் என மேல் பூங்குருத்தி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த மலைக்கிராம மக்ளின் சாலை வசதி மேம்படுத்தும் வகையில் பர்கூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜைகள் நடைபெற்றது.
இந்த பூஜையில் கலத்துக் கொண்ட பர்கூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பூங்குருத்தி மற்றும் மேல் பூங்குருத்தி கிராமங்களில் சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
அப்போது வரட்டனப் பள்ளி கூட்டுறவு சங்க தலைவர் வெற்றிசெல்வன், மாதையன் உள்ளிட்ட மலைக்கிராம மக்களும்  கலந்து கொண்டனர்.
மலைக்கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி மேற்கொள்ள பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *