கிருஷ்ணகிரி அருகே உள்ள எலத்தகிரி அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் 600 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் பணியை சட்ட மன்ற உறுப்பினர் இராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொல்லப்பள்ளி மற்றும் எலத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் போது ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், மாவட்ட MGR மன்ற செயலாளர் மாதையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பள்ளி கல்வித்துறையில், தமிழக அரசு செயல்படுத்திவரும் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து இப்பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் 600 மாணவ, மாணவிகளுக்கு பர்கூர் சட்ட மன்ற உறுப்பினர் இராஜேந்திரன் அவர்கள் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசும் போது, கிராமப்புரத்திலிருந்து இப்பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்கள், இம்மிதிவண்டிகள் நன்கு பயன்படுத்தி நன்கு படிப்பதோடு வாழ்க்கையில் முன்வரவேண்டும், இதற்காக கொடுக்கப்பட்டுள்ள இந்த மிதிவண்டிகள் மூலமாக குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த விழாவின் போது பள்ளி தலைமை ஆசியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.













Leave a Reply