உலக ஞான சித்தன் கூட தன்னை அவதாரம் யென்று கூறலையே!

Share Button

உலக ஞான சித்தன் கூட தன்னை
அவதாரம் யென்று கூறலையே மானுடா

உன் கர்மத்திற்க்கு பூசை செய்யும் உன்
மதி கூட இன்னும் போகலையே மானுடா

முன்வினை அழுக்கு ஒன்று பின்வினையாய் துரத்துதடா மதிவிதி அறியா மானுடா

புறவித்தை பாழ்வினையே சிவனை அறியா உன் ஐம்புலனும் பாழ்வினையடா மானுடா

ஏட்டினை படித்து ஏகனனெ கூறுவதும் பாட்டினை படித்து சித்தனென கூறுவதும்
சித்தியில்ல பாழ்மனமடா மானுடா

அறிந்தை கூறி சிவமாகு அறிய கூறி குருவாகு மானுடா

வீணான சடையும் விளங்காத உடையும் சித்தம் இல்லையடா மானுடா

உன்னை சீராக்க்கி கொண்டால் நீயே சிவனென அறியும் சித்தியும் நீயடா மானுடா

பணபித்தால் தீவினையாகதே குறி சொல்லி குடியை கெடுக்காதே மானுடா

மாயையில் ஆடி மாண்டுதான் போகாதோ தேவைக்கு ஆடி பரமன்னென கூறாதே மானுடா

ஊழ்வினை அத்துனையும் ஊன் உடலை அழிக்குமடா மதியில்லா மானுடா

ஐந்தினை மூன்றும் மூன்றினை ஆறும் ஆளும் சூத்திர சித்தியடா மானுடா

அறியா பிள்ளையடா அறிந்தால் நீ இந்த சீவனுக்கு சீவ முக்தியடா மானுடா

– பிரபு அதோமுகன்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *