12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ல் வெளியீடு!

Share Button
தமிழகம் மற்றும் புதுவையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தின் படி இந்த தேர்வு நடத்தப்பட்டது.
12ம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். 2941 தேர்வு மையங்களில் 12ம் வகுப்புதேர்வு நடந்தது. கணிதம், விலங்கியல், வணிகவியல், வேதியியல் ஆகிய பாடங்களை தவிர மற்ற பாடங்கள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த பணி ஏப்ரல் 11-ம் தேதி முடி வடையும் என கூறப்படுகிறது. அதன்பிறகு  12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ல்  வெளியிடப்பட உள்ளன என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *