கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் சேவை செய்பவர்களை ஊக்கம் தரும் வகையில் நினைவு பரிசுகளை பல ஆண்டுகளாக வழங்கி வருகிறார் ஆசிரியர் கு.கணேசன்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுதல், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவுதல், நோயாளிகளுக்கு உதவுதல், பெண் குழந்தைகளுக்கு உதவுதல், மருத்துவ செலவிற்கு உதவுதல், திருமண செய்ய உதவி, விதவை பெண்களுக்கு உதவுதல், போன்ற பல்வேறு சேவைகளை செய்து வரும் ஊத்தங்கரை சேர்ந்த நல்ல உள்ளங்களுக்கு, அவர்கள் படம் பொதிந்த காலண்டரை நினைவு பரிசாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் கணேசன் பல ஆண்டுகளாக வழங்கி வருகிறார்.
இதை பற்றி ஆசிரியர் கணேசன் அவர்கள் கூறியதாவது… சேவைகள் செய்யும் எண்ணம் கொண்ட நல்ல உள்ளங்களை அணுகி, பல்வேறு வகையான நல உதவிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறோம். அவர்களை ஊக்கம் தரும் வகையில் அவர்களின் படம் பொதிந்த காலண்டரை நினைவு பரிசாக வழங்குகிறோம்.
அந்த காலண்டரை பார்க்கும் போதெல்லாம் இன்னும் சேவைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். இதன் மூலம் பல மாணவர்கள் நன்மை அடைவார்கள். அதற்காகத்தான் இந்த நினைவு பரிசு வழங்குகிறோம் என்றார் ஆசிரியர் கணேசன்.
வாழ்த்துக்கள் நண்பரே! மனிதத்தன்மை வாழட்டும்.
Super