தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்

Share Button
சென்னை :-
தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் :

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

குறிப்பிடத்தக் அளவில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மிதமானது முதல் கன மழை கடந்த இரண்டு நாட்களாக பெய்து வருகிறது. இராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், சென்னை, திருப்பூர், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இனியுடன் கூடிய கன மழை பெய்யக்ககூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இராணிப்பேட்டை, வேலூர், திருப்பூர், திருவண்ணாமலை அதனைச் சுற்றியுள்ள ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.