புளியந்தோப்பில் கட்டப்பட்ட தரமற்ற குடியிருப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொறியாளர் சஸ்பெண்ட் பரபரப்பு தகவல்
தரமற்ற குடியிறுப்புகளை கட்டியது தொடர்பான விவகாரம் இன்று சட்டசபையில் கேள்வி எழுப்பப்ட்டது. சென்னை புளியந்தோப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகள் தரமற்றதாக உள்ளது என்ற பிரச்சினை சமீபத்தில் ஒரு பரபரப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது.
மக்கள் வசிக்கும் குடியிறுப்புகளை தரமாகவும், உறுதியாகவும் கட்டி கொடுப்பதே பொறியாளர்களின் முக்கிய கடமையாகும். ஆனால் இதுபோன்ற தரமற்ற குடியிறுப்புகளில் வசிக்க அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர்கள் நேரில் சென்று அங்கு ஆய்வு செய்தனர்.
இந்த விவகாரத்தில் உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் தா.மோ. அன்பரசன் இது சம்பந்தமாக தெரிவிக்கையில் தரமற்ற குடியிருப்பை கட்டிய ஒப்பந்ததாரரை பிளாக் லிஸ்ட்டில் சேர்க்கவேண்டும் எனவும், விரைவாக நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.