இறுதிக் கட்டத்தை நெருங்கிய ஐபிஎல் தொடர்

Share Button

ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தொற்று சிக்கலில் ஐபிஎல் நிர்வாகம்…

2021-ம் ஆண்டு 14-வது  ஐ.பி.எல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடந்து வந்த நிலையில் ஐ.பி.எல் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.எனவே திடீரென ஐ.பி.எல் போட்டிகள் மே மாதம் முதல் வாரத்திலேயே ரத்து செய்யப்பட்டது. 29 போட்டிகள் முடிந்த நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த முடியாமல் ஐபிஎல் நிர்வாகம் திணறியது.

அமீரகத்தில் மீண்டும் தொடங்கிய ஐபிஎல் தொடர்…

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள போட்டிகளை நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டு  செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐ.பி.எல் தொடர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது இறுதி போட்டி அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

தகுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள்

ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிவரும் 8 அணிகளும் தலா 13 போட்டிகளில் விளையாடி முடித்துள்ள நிலையில் அனைத்து அணிகளும் தற்போது கடைசி போட்டிக்காக விளையாட காத்திருக்கும் நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ்,ராயல் சேலஞ்ஜெர்ஸ் பெங்களூரு என 3 அணிகள் தகுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இறுதி கட்டத்தில் ஐ.பி.எல் தொடர் விறுவிறுப்பான தகுதி சுற்றுக்கான கடைசி ஆட்டங்கள்

தகுதி போட்டிக்கான நான்காவது அணிக்காண போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கும் கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ்-கும் நடைபெறும் போட்டியில்  12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில் நான்காவது இடத்தில் உள்ள கொல்கத்தா  வெற்றி பெரும் பட்சத்தில் தகுதி சுற்றுக்குள் நுழைய அதிகப்படியான வாய்ப்புள்ளது பத்து புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் தகுதி சுற்றுக்குள் நுழைவது சந்தேகமே.12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ள கிட்டத்தட்ட தகுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்த மும்பை அணிக்கும் இன்றைய போட்டி முடிவுகள் பொறுத்தே தகுதி பெறுமா என்பது தெரியவரும் என்பதால் ஐ.பி.எல் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.