குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் முக ஸ்டாலின்தான் அடுத்த தமிழக முதல்வர் என்று கூறினார் .
நான் பலமுறை கருணாநிதியை சந்தித்து இருக்கிறேன் என்று கூறிய அவர், நான் அவரை சந்தித்தது எனக்கு பெரிய மகிழ்ச்சி அளித்தது என்று தெரிவித்தார். கலைஞரிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன் என்று கூறிய ராகுல் காந்தி, கருணாநிதி திமுகவை இப்போதும் வழி நடத்தி வருகிறார் எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர் நம்முடன்தான் வாழ்ந்து வருகிறார் என்று பேசிய அவர், தமிழகத்தின் வளர்ச்சியில் இரண்டற கலந்தவர் கருணாநிதி என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும் 2019 தேர்தல் தமிழக மக்களின் உரிமைக்குரலாக இருக்கும் என்று தனது உரையில் அழுத்தி தெரிவித்த ராகுல் காந்தி, தமிழக அரசு மோடியின் கைப்பாவையாக உள்ளது என்று தமிழக மக்கள் போராட்ட குணம் கொண்டவர்கள் என்றும், உண்மையை காக்க தமிழக மக்கள் உயிரையும் கொடுப்பார்கள் அவர் பேசினார்.
பிரதமர் மோடிக்கு பொய் பேசுவது மட்டுமே வேலை என்று தெரிவித்த அவர், மோடி ஆட்சிக்கு வரும் முன் ரூ.15 லட்சம் அளிப்பதாக கூறினார். ஆனால் அவர் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்றும் மக்களை வறுமையில் தள்ளி இருக்கிறார் மோடி மக்களுக்கும், தமிழுக்கும் மோடியால் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.
இதனிடையே மத்தியில் இருந்து கொண்டு மாநில அரசுகளை மோடி அடக்கி ஆள்கிறார் என்றும் மோடியால் தமிழ்நாட்டை இனியும் கட்டுப்படுத்த முடியாது எனவும் தமிழக மக்கள் அதை எப்போதும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
Leave a Reply