பொள்ளாச்சி பலாத்கார வழக்கு : தலைவர்கள் கண்டனம், பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி

Share Button

பொள்ளாச்சி பலாத்கார வழக்கு : தலைவர்கள் கண்டனம். பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பெண்ணினம் கசக்கப்படுவதையும் நசுக்கப்படுவதையும், துளியும், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பாதிக்கப்பட்டபெண்கள் பாதுகாக்கப்படவேண்டும். சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். சிறப்பு புலனாய்வு வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயற்சி செய்வது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்  என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் .

பொள்ளாச்சியில் மாணவிகளை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தேவை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பாலியல் வழக்கில் சிக்கியுள்ள குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சியினரே போராடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் மன்றத்தில் திமுக போராட்டத்தை மேற்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *