கரும்பலகை

Share Button

கரும்பலகை

பூட்டப்பட்டக் கதவுகள் திறக்கப்படாமலே
பூட்டிய சாளரத்தில் சரியாக
பூட்டப்படாத ஒரு சாளரம்
காற்றின் அலைகளில் பட்டு
அவ்வப்பொழுது எழுப்பும் சப்தம்
துக்கத்தையும் தூக்கத்தையும்
கலைத்தபடி சற்றே ஆறுதலாய்…

ஒரு வருடத்திற்கு முன்னால்
எழுதப்பட்ட பழைய வாசகத்தை
இன்னும் சுமந்தபடி…
இறந்த தேதியைத் தன்னில்
இன்னும் தாங்கியபடி…

புதிய சிந்தனைகள் ஏதும் இல்லாதபடி
சொல்பவரும் கேட்பவரும்
யாருமே இல்லாதபடி
எண்ணும் எழுத்தும் இல்லாதபடி
சுண்ணப்பொடிகள் இல்லாத
எந்த நெடியும் நொடியும்
தனக்கு மகிழ்ச்சி தராதபடி…

தூசி லேசாய் படர்ந்திருக்கும்
தன் மேனியின் மீது
எந்த வண்ணச்சுண்ணமும் பூசாதபடி…
மாணவர்களின் வருகையை
எதிர்நோக்கியபடி
விடுமுறை நாளில்
தன்னந்தனியாக புலம்பிக்கொண்டிருந்த
வகுப்பறை கரும்பலகை…

பொன். சண்முகசுந்தரம்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

2 responses to “கரும்பலகை”

  1. Saravanan says:

    அருமை நண்பா

  2. Shanmugasundaram says:

    நன்றி நண்பரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *