வீர வசனம் என்றாலே இன்றளவுக்கும் நம் மனதில் உடனே நியாபகத்திற்கு வருவது கட்டபொம்மன் கூறிய “யாரைக் கேட்கிறாய் வரி..? யவரைக் கேட்கிறாய் வட்டி..?” என்கிற வசனம் தான் அந்த அளவிற்கு 200 ஆண்டுகளை தாண்டியும் அவரது வீரம் தமிழ் மண்ணில் மறையாமல் உள்ளது.
அந்த அளவிற்கு நமக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தவர் தான் இந்த வீரபாண்டிய கட்டபொம்மன்.
ஆங்கிலேயர்கள் இந்தியமண்ணில் தங்களது ஆதிகத்தினை செலுத்தியபோது அவர்களை துணிந்து எதிர்த்தவர் இந்த கட்டபொம்மன்.
ஆங்கிலேய வணிகம் கட்டபொம்மனின் ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் தனது வணிகத்தினை துவங்க நினைத்த போது தனது துணிவான மன தைரியத்தினால் ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற மாவீரன் கட்டபொம்மனின் வாழ்க்கையினை தெரிந்து கொள்ள இந்த பதிவினை தொடர்ந்து வாசிக்கவும்.
கட்டபொம்மன் பிறப்பு :
தமிழகத்தில் உள்ள இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ளது பாஞ்சாலங்குறிச்சி. அந்த ஊரில் 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி திக்குவிசய கட்டபொம்மன் மற்றும் ஆறுமுகத்தம்மாள் என்கிற தம்பதிக்கு மகனாய் பிறந்தார்.
இவரது இயற்பெயர் வீரபாண்டியன் மற்றும் அவர்களது குடும்பப்பெயர் கட்டபொம்மன் இது இரண்டும் மருவி வீரபாண்டிய கட்டபொம்மன் என்றானது.
பெயர் – வீரபாண்டிய கட்டபொம்மன்
பிறந்த தேதி மற்றும் ஆண்டு – ஜனவரி 3, 1760
பெற்றோர் – திக்குவிசய கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள்
பிறந்த ஊர் – பாஞ்சாலங்குறிச்சி
இளம் வயது மற்றும் திருமண வாழ்க்கை :
கட்டபொம்மனின் உடன் பிறந்தவர்களுடன் சேர்த்து மொத்தம் ஐந்து. அவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உண்டு. இவர் அரச குடும்பம் என்பதால் செல்வாக்காகவே வளர்ந்தார் . பிறகு தனது தந்தையின் மேல் வைத்த பாசம் மற்றும் ஈர்ப்பின் பேரில் அவர் தனது இளம் வயதில் அவரது தந்தையான திக்குவிசய கட்டபொம்மனின் உடனே அவருக்கு உதவியாக இருந்தார்.
பிறகு அவர் வாலிப வயதினை அடைந்ததும் வீரசக்கம்மாள் என்கிறவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாகும்வரை புத்திர பாக்கியம் அமையவில்லை. இவரது சந்ததி இவருடன் முடிந்துவிட்டது.
அரியணை எறிய பாளையக்காரர் :
தனது 30 ஆம் வயதில் தனது தந்தையின் பாளையக்காரர் என்ற அரியாசனத்தில் அமர்ந்தார் கட்டபொம்மன். அவருக்கு இரு சகோதரர்கள் இருந்தும் அவர் அரியணை ஏறினார். இதற்கு காரணம் அவர் பெற்ற நன்மதிப்பும் அவரது வீரமும் தான் இவையிரண்டை வைத்தே அவர் பாளையக்காரர் அரியாசனத்தில் அரியணை ஏறினார்.
பாஞ்சாலங்குறிச்சியில் வரி வசூல் செய்த ஆங்கிலேயர்கள் :
ஆங்கிலேயர்கள் இங்கிருந்த ராஜ்யங்களில் தொடர்ந்து வரி வசூல் செய்து கொண்டிருந்தனர். தொடர்ந்து பல ராஜ்ய மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டி வந்தனர். இதனால் கட்டபொம்மனும் அவர்களுக்கு கப்பம் கட்டவேண்டி இருந்தது.
தன் ராஜ்யத்தில் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டும் அளவிற்கு பணம் இல்லை என்பதனால் அவன் மக்களிடம் பணம் வசூலித்தான். அப்போது அந்த பகுதியில் வாழும் மக்கள் அவனை வசைபாட துவங்கினர்.
கட்டபொம்மனை நோக்கி சீரிய ஜாக்சன் துரை :
மக்கள் தன்னை வசைபாடுவதை கண்டு மனம் நொந்து இருந்த நேரத்தில் ஜாக்சன் துரை அவனிடம் பணத்தினை வசூலிக்க வந்தான். அப்போது கோவத்தின் மிகுதியில் இருந்த கட்டபொம்மன் ஜாக்சன் துரையை நோக்கி “வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”. என்று துணிச்சலாக அவரின் முகத்தின் எதிரே தனது வீரத்தினை வெளிப்படுத்தி வரியினை கட்ட முடியாது என்று துணிச்சலாக கூறி அவனை வெளியே அனுப்பினான்.
கட்டபொம்மன் நிகழ்த்திய போர் :
ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானை வீழ்த்திய பிறகு அவர்களது பார்வை வீரபாண்டிய கட்டபொம்மன் மீது திரும்பியது. இவனை வீழ்த்தினால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைத்த ஆங்கிலேயர்கள் அவன் மீது போர் தொடுக்க தயாரானார்கள்.
இதனை முன்பே கணித்த கட்டபொம்மன் தனது ஆதரவாளர்களுடன் ஆங்கிலேயரை எதிர்த்தான். போரில் கடுமையாக சண்டையிட்டும் ஆங்கிலேயர்களால் அவனது ராஜ்ஜியம் கவரப்பட்டது. போரில் தனது ராஜ்யத்தை இழந்த கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கேட்டார்.
ஆனால் ஆங்கிலேயர்களுக்காக பயந்து அந்த மன்னன் கட்டபொம்மனை காட்டிக்குடுத்துவிட்டார். அதோடு அவரையும் ஆங்கிலேயர்கள் சிறைபிடித்தனர்.
தூக்கிலிடப்பட்ட கட்டபொம்மன் :
ஆங்கிலேயர்கள் சிறைபிடித்தபின்னர் நடந்த விசாரணையின் போதும் தனது வீரத்தினை வெளிக்காட்டினார். விசாரணையின் போது அவர் நான் உங்களை அழிக்கவேண்டும் என்று நினைத்து தான் உங்கள் மீது போர் புரிந்தேன் என்று வீர உரைபுரிந்தார்.
மேலும் நான் இங்கு தூக்கிலிடப்படுவதை காட்டிலும் நான் என் இடத்திலே உங்கள் கையால் இறந்திருக்கலாம் என்று கயத்தாறு எனும் பகுதியில் 1799ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.
Leave a Reply