பொள்ளாச்சி போராட்டம் எதிரொலி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை

Share Button

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம்  தொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்  நேற்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது, மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலிசாருக்கும், மாணவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பல மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் இன்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. பாலியல் கொடூர வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து  தமிழகத்தின் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றும் போராட்டம் நடக்கலாம் என எதிர் பார்க்கப்படுவதால் உடுமலைபேட்டையிலும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *