1. காட்டருவிக்காக /
காத்திருக்கின்றன
மேடுகளும்.. பள்ளங்களும்../
காதல்..
2. கன்னி இதயத்தில் /
கவனமின்றி மோதியதால் /
காதலர் கைது
3. கலங்கரை விளக்கத்தில்/
கலகங்கள் வலுக்கிறது /
கறையேறிய வேட்டிகள்..
4. கற்பனை குதிரை /
கடிவாளமின்றி வேகமாக ஓடுகிறது /
கவிதையை படித்தவுடன்..
5. கலங்கிய பெற்றோர் /
கல் நெஞ்சமுடன் வெளியேறுகின்றனர் /
காதல் ஜோடி..
………………………………………………………………………….
- சாரதா க. சந்தோஷ் – ஐதராபாத்
கவிஞர்களின் படைப்புகளை
பதிவிட்டு சரித்திரம் படைக்கும்
புதுவரவு இதழ் குழுமத்தாருக்கு
வாழ்த்துகள்..
nandru.paaraatukal
நன்றி சகோ.. தங்களை கண்டதில் மகிழ்ச்சி