விஜய் முதலில் தேர்தலில் போட்டியிட முடியுமா?

Share Button

கடுமையான பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய த.வெ.க தலைவர் விஜய் !

விஜய் முதலில் தேர்தலில் போட்டியிட முடியுமா?

அப்படியே போட்டியிட்டால் அவரை தகுதி நீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வருகிறது வருகிறது.

சொத்து கணக்கு காட்டுதல், நீதிமன்ற வழக்கு, உட்பட பல சவால்களை விஜய் சந்தித்த பிறகே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்று தெரிகிறது ; பரபரப்பை கிளப்பியுள்ளது இந்த செய்தி!?

இந்த சூழலில் நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், திட்டமிட்டு மக்களை காக்க வைத்து, கூட்ட நெரிசலை உருவாக்கி, அதை தேர்ந்த ஒளிப்பதிவாளர்களையும், விலை உயர்ந்த கேமராக்களையும் பல கோணங்களில் படம் பிடித்து இருப்பது தெரிய வந்துள்ளது !

மக்கள் கூடுவதை படம் எடுத்து அதை திரைப்படங்களில் பயன் படுத்தும் முறை பல காலமாக நடந்து வரும் ஒன்றுதான்.

ஆனால் இதில் பிரச்சினை 44 உயிர் பலி என்பதே.

41 பேர்கள் + அதில் இரண்டு ( வயிற்றில் ) குழந்தைகள் 41 + 2 = 43 + த.வெ.க கட்சியும் பலியானது, ஆக மொத்த பலி 44 ஆகும்.

பா.ஜ.க தரப்பில் 45 தொகுதிகள் + அமைச்சரைவில் 5 நபர்கள் போன்ற பல பேரங்கள் தரப்பட்டதாக தகவல் வந்தன.

அதுமட்டுமன்றி ஜனநாயகன் படத்தின் உண்மையான தயாரிப்பாளர் விஜய்தான்.

பா.ஜ.க திட்டமிட்டு படத்தை வெளியிட முடியாமல் அழுத்தம் கொடுத்து வருகிறது.

பா.ஜ.க வின் கட்டளையை விஜய் ஏற்றுக் கொண்டு இருந்தால், அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் த.வெ.க இணைந்து இருக்கும், வழக்குகள், ஜனநாயகன் திரைப்படம் எல்லாம் சுமூகமாக முடிந்து இருக்கும்.

ஆனால் விஜய் உறுதியாக இருந்தார், எனவே அனைத்து தொகுதியிலும் த.வெ.க தனித்து போட்டி என்பது உறுதியானது.

மேலும் இந்த கூட்டணியில் விஜய் வருவதை எடப்பாடி அவர்கள் விரும்பவில்லை.

எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்பதில் பல சந்தேகங்கள் உள்ளது.

மீண்டும் ஒரு கூவத்தூர் உருவாக வாய்ப்பு உள்ளது என்று யூகிக்க முடிகிறது.

எஸ்.பி.வேலுமணி, விஜய், தினகரன் ஆகியோர் கூட்டணி தேர்தல் முடிந்த பிறகு அமையும் என்று நான் நினைக்கிறேன் !

எது எப்படி இருந்தாலும், பா.ஜ.க விடம் சமரசம் செய்து கொள்ளாமல் போனதால், விஜய் பல பிரச்சினைகளை சந்திப்பது நிச்சயம் !

தோழமையுடன்,
டி.எஸ்.ஆர்.சுபாஷ்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *