கன மழை காரணமாக கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
சென்னை :-
தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருவதால் பல இடங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் தீபாவளி வரை 5 நாட்களுக்கு பலத்த மற்றும் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
Leave a Reply