(இல்லம் தேடிக் கல்வி) மூன்றாம் வெளி; தேவையும், புரிதலும்!
மூன்றாம் வெளி – தேவையும், புரிதலும்!
மூன்றாம் வெளி குறித்து பேசிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பள்ளியே குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமாகவும், அவர்களின் ஆளுமையை வளர்த்தெடுப்பதில் முதன்மையாகவும் திகழ்கின்றது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
மூன்றாம் வெளி என்பது குழந்தைகளுக்கு கற்றலை எளிமையாக்க பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையே பாலமாக உள்ளது. குழந்தைகள் இந்தச் சமூகவெளி அனுபவங்களின் வாயிலாக ஆளுமையுடன் அறிவை வளர்த்துக் கொள்கின்றனர்.
இதனை ஆசிரியர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியை வழங்க முடியும். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை இந்த அடிப்படையிலே பார்க்க வேண்டியுள்ளது.
இந்த மூன்றாம்வெளி குழந்தைகள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும்போது குழந்தைகளுக்கு உதவுவதற்கும், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் கருத்தியல் கட்டமைப்பாக மூன்றாம் வெளி/ இடம் திகழ்கின்றது.
மூன்றாம்வெளி குறித்து விரிவாக பேசும்முன் பள்ளி ஏன் அவசியம் என்பதை புரிந்து கொள்ள , பள்ளி தேவையில்லை என்பது குறித்த பார்வையில் இருந்து பள்ளியின் தேவையையும், மூன்றாம்வெளியின் அவசியத்தை புரிந்து கொள்வோம்.
பள்ளி குறித்து விமர்சனங்கள் காலம்காலமாக தொடர்ந்து வருகின்றன. அதனை மறுப்பதற்கு இல்லை. கல்வியாளர்கள் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவற்காக மாற்றங்களை முன் மொழிந்துள்ளனர்.
பல புதிய அணுகுமுறைகளை செயல்படுத்தியும் வருந்துள்ளனர். அந்தவகையில் இல்லிச் என்பவர் பள்ளியில் இருந்து விலகுதல் திட்டத்தை (வீட்டுப்பள்ளி திட்டத்தை) முன்மொழிந்தார். வீட்டுப் பள்ளியில் குழந்தைகள் சுதந்திரமாக சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்று நம்பினார்.
பள்ளிக்கல்வி என்பது ஒரு கல்வி முறை மற்றும் தத்துவம் ஆகும். ஆனால், வீட்டு பள்ளி ( Home schooling) குழந்தைகள் தாங்கள் கற்றுக்கொள்ள விரும்புவதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை ஊக்குவிக்கிறது.
இன்னும் குறிப்பாக, இது மாணவர் வீட்டில் கற்றலுக்கு ஏற்றவாறு பாரம்பரியக் கல்வியை விட்டு வெளியேறும் செயல்முறையையும், இதைப் பழக்கப்படுத்திக்கொள்ளும் நேரத்தையும் குறைக்கிறது எனக் கருதினார்.
லேனின் கூற்றுப்படி, “பள்ளிகளில் மாணவர்கள் கைதிகளைப் போன்றவர்கள்: கற்றல் என்பது அவர்களுக்குச் சொல்லப்பட்டதைச் செய்யும் ஒரு செயல்முறையாகும். எப்போது, எப்படி, எங்கு செயல்படுத்தவேண்டும் என்பதும் அவர்களுக்குச் சொல்லப்படுகிறது.”
டேவிட் லேன் மட்டும் அப்படி நினைக்கவில்லை. ஜூலியோ ரோஜெரோவும் (ஸ்பெயின் ஆசிரியர், ஓபன் ஸ்கூல் கூட்டுக்குழுவின் செயலில் உள்ள உறுப்பினர், கல்வியியல் புதுப்பித்தல் இயக்கங்களைச் சேர்ந்தவர்) பள்ளிகளை பள்ளியிலிருந்து நீக்கும் யோசனையுடன் உடன்படுகிறார்.
இப்படிப்பட்ட கருத்துகளை கல்வியாளர்கள் முன்மொழிவதற்கு காரணங்கள் உண்டு.
உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது, மேலும், குழந்தைகள் சிறந்த முறையில் எதிர்கொள்ளத் தயாராக இல்லை, ஏனெனில் அவர்கள் சவால்களை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளவில்லை, ஏனென்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது சொல்வதற்காக மட்டுமே அவர்கள் காத்திருக்கிறார்கள். அது உண்மையும் கூட.
பாரம்பரிய பள்ளிக்கூடம் என்பது தேர்வுகள், மாணவர்களின் தேர்ச்சி (கல்வி வெற்றி), பாடத்திட்டம் மற்றும் பிற காரணிகளில் அதிக கவனம் செலுத்துகிறது. அதனால் , பாரம்பரிய பள்ளிக்கூடம் சோர்வுற்ற ஆசிரியர்களை உருவாக்குவதுடன், மாணவர்கள் ரசிக்காத அல்லது மனங்களைக் கவராதக் கற்றலைச் சாத்தியமாக்குகிறது.” என்கின்றார் ஜூலியோ ரோஜெரோ.
ஒரு பாரம்பரிய மாதிரியில், மாணவர்கள் பெரும்பாலும் கவனம் செலுத்துவது போல் நடிக்கிறார்கள், மேலும் அவர்கள் எதையும் கற்றுக் கொள்வதில்லை அல்லது அவர்களின் நேரத்தை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்று தெரியாததால் மிகக் குறைவாகவே கற்றுக்கொள்கிறார்கள் என்பதை வீட்டுப் பள்ளி கருத்தியலை முன்மொழியும் பல பேராசிரியர்களின் கருத்தாக உள்ளது.
“மாணவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிக்காத மற்றும் கல்விச் செயல்பாட்டில் அவர்களுடன் இணைந்து செயல்படுவதைத் தடுக்கும் கல்வியாளர் என எதையும் மாற்ற வேண்டியது அவசியம்.” என்கின்றார் ரோஜெரோ.
ஆசிரியர்களைப் பொறுத்தவரை, பாரம்பரிய பள்ளி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் வைக்கின்றார்.
ரோஜெரோ கற்றல் முழுநேரமாக இருப்பதைப் பாராட்டுவதற்கு குறைவான நெகிழ்வற்ற அட்டவணைகளைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் இடைவெளிகளை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்; மிகவும் நெகிழ்வான உள்ளடக்கம் இருக்க வேண்டும், அதில் பல்வேறு துறைகளை உள்ளடக்கியது மற்றும் அதிக மனித கல்வியை உருவாக்க, உறவுகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்கின்றார்.
மாணவர்களை பள்ளியிலிருந்து விலக்குவது அவசியம். ஏனினில், மாணவர்களை எதிர்மறை, கட்டுப்பாடு, பரிந்துரைக்கப்பட்ட, திணிக்கப்பட்ட, அறியப்பட்ட மற்றும் மீண்டும் மீண்டும் செய்ய வலியுறுத்தும் கற்றல் செயல்முறைகள் மூலம் உருவாகின்றார்கள்.
மேலும், பள்ளியை விட்டு வெளியேற வேண்டியவர்கள் மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் கூட. என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. இவர்களின் தத்துவத்தின்படி, பேராசிரியர்கள் முற்றிலும் கல்விப் பார்வையை விட்டுவிட்டு, மாணவர்களின் மதிப்பீட்டில் கவனம் செலுத்தும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றனர்.
மேலும், குடும்பங்கள் இந்த பள்ளிக்கல்வி செயல்முறையின் இன்றியமையாத பகுதியாகும் என்பதால் ரோஜெரோ பள்ளி மாற வேண்டும் என்பதை சமூகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றார்.
“நம்மிடம் உள்ள பள்ளியின் மாதிரி மதிப்பை இழந்து நெருக்கடியில் உள்ளது. அதை ஆழமாக மாற்றுவது அவசியம். பகுதி சீர்திருத்தங்கள், திட்டங்கள் மற்றும் பள்ளியை அப்படியே வைத்திருக்க ஒப்பந்தங்கள் ஆகியவற்றால் நாங்கள் பெருகிய முறையில் விரக்தியடைந்துள்ளோம்., “என்கின்றனர் ஓப்பன் ஸ்கூல் பரிந்துரைக்கும் கல்வியாளர்கள்.
டேவிட் லேன் அல்லது ஜூலியோ ரோஜெரோவைப் போலல்லாமல், மற்ற கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் பள்ளியிலிருந்து வெளியேறும் செயல்முறை ஆபத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள்.
நடாலி வெக்ஸ்லர் டி- ஸ்கூலிங்கை எதிர்க்கின்றார். குறிப்பாக மாணவருக்கு பாடம் தெரியாது அல்லது மிகக் குறைவாகவே தெரியும். தவிர, குழந்தைகள் தங்களுக்குத் தெரியாத ஒன்றைக் கற்க விரும்பாதவர்களாக இருக்கிறார்கள், எனவே இந்த விஷயங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று வெக்ஸ்லர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த தத்துவத்தின் எதிர்ப்பாளர்களை கவலையடையச் செய்யும் தலைப்புகளில் ஒன்று, வாசிப்பு மற்றும் கணிதம் போன்ற தேவையான திறன்களை வளர்ப்பதாகும். வெக்ஸ்லர் “அன்ஸ்கூல்ட்” என்ற ஆவணப்படத்தைக் குறிப்பிடுகிறார், அங்கு மூன்று இளம் அமெரிக்கர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டு சுயமாக கற்றுக்கொள்ளத் தொடங்குகிறார்கள்.
இயக்குனர்கள், ரேச்சல் பெத் ஆண்டர்சன் மற்றும் திமோதி க்ருசா ஆகியோரின் பார்வை ஆவணப்படத்தின் முடிவில் மூன்று மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடைந்ததை தெளிவுபடுத்துகிறது. இந்த பரிசோதனையில் பங்கேற்பாளர்களில் இருவர் இன்டர்ன்ஷிப்பைப் பெற முடிந்தது.
வெக்ஸ்லரின் கூற்றுப்படி, மாணவர்கள் தங்கள் கல்வியை கவனித்துக் கொள்ள அனுமதிக்கும் மிகப்பெரிய ஆபத்து, அவர்கள் ஒரு பகுதியில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் தங்கள் முழு திறனை வளர்த்துக் கொள்ளவில்லை.
வெக்ஸ்லரின் வாதத்துடன் ஒத்துப்போகும் வகையில், குழந்தைகளின் கல்வியை கவனித்துக் கொள்ள அனுமதிப்பது, இந்த பகுதிகளில் அவர்களுக்கு ஆர்வமின்மையின் காரணமாக, அத்தியாவசிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதை இழக்க நேரிடும் என்று கே12 அகாடமி பரிந்துரைக்கின்றது.
மேலும், தங்கள் குழந்தைகளின் திறன்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அல்லது ஆர்வமுள்ளவர்களாகவும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் அவர்களை ஊக்குவிக்கும் சூழலை வழங்குவதற்கு குடும்பங்கள் தயாராக இல்லாத சந்தர்ப்பங்களும் உள்ளன என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
இப்போது நமது முறையான பள்ளிக்கல்வி முறையில் உள்ள குறைகளைப் பட்டியலிடுவதன் மூலம் மூன்றாம் வெளிக்கானத் தேவை குறித்து விவாதிப்போம்.
1. ஆசிரியர் மையம் கொண்ட கல்விமுறை.
2. குழந்தைகளின் உள்ளார்ந்த ஆற்றலை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை பள்ளிகள் வழங்கவில்லை . அவை குழந்தைகளை உலகமற்றவர்களாக ஆக்குகின்றன.
3. முறையான பள்ளிக்கல்வி, மனப்பாடம் செய்வதற்கு முக்கியத்துவத்தை அளிக்கிறது
4. பள்ளி வளிமண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆசிரியர் குழந்தைகளை ஜனநாயகவாதிகளாக்குவதில் விலக்கி வைக்கின்றார்.
5. பள்ளிகள் பெரும்பாலும் குழந்தைகளை நடைமுறை வாழ்க்கையிலிருந்து விலக்கி வைக்கின்றன
6. அதிக முடிவு சார்ந்த மற்றும் நிபுணத்துவம் பெற்ற பள்ளி அமைப்பு குழந்தைகளின் அழகியல் உணர்வு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளவில்லை.
7. பள்ளிகள் எப்பொழுதும் நம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் நிறுவனமயமாக்கப்பட்ட திட்டமிடல் முறையை வைத்திருக்க நம்மை கட்டாயப்படுத்துகின்றன.
8. பள்ளிகள் இளைஞர்களை நிர்பந்திக்கின்றன, அங்கு எல்லாம் அளவிடப்பட்டு சமுதாயத்தில் பிளவுகளை உருவாக்குகின்றன.
9. பாரம்பரிய பள்ளிகள் நுகர்வோர் மீது கவனம் செலுத்துகின்றன, இதனால் இளைஞர்கள் எல்லாவற்றையும் நுகர்வோரின் மனதுடன் அணுகுகிறார்கள்
10. பள்ளிகள் குழந்தைகளை ஒரே மாதிரியாக மாற்றுகின்றன, அதனால் அவர்கள் தனித்துவமான வாழ்க்கை முறையை வைத்திருக்க முடியாது.
இல்லம்தேடும் கல்வித்திட்டம் சமூகரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கற்றல் மற்றும் ஆளுமை மேம்பாட்டிற்கு பெரிதும் எதிர்ப்பார்த்த மாற்றத்தை / நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை பேஸ் லைன் சர்வேயின் சமீபத்திய புள்ளி விபரங்களில் இருந்து அறிய முடியும்.
பொதுவாக குழந்தைகள் வீடு மற்றும் பள்ளி இவற்றிற்கு இடையே ஒரு மெய்நிகர் இடைவெளியை அனுபவிக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த நிறுவன விதிகள் மற்றும் கட்டமைப்புகளில் குழந்தைகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதில் சிரமத்தை மேற்கொள்கின்றனர்.
மையம் குழந்தை மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதனால், இல்லம்தேடிக் கல்வி ஒரு சமூக மற்றும் கலாச்சாரக் கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. பள்ளியையும் வீட்டையும் இணைக்கும் மூன்றாவது இடமாக திகழ்கின்றது.
இந்த நோக்கில் நாம் ஆராய்ந்தால் மூன்றாவது இடமாக எதையெல்லாம் கருதமுடியும் என்பது நமக்கு தெளிவாகும்.
மூன்றாம் வெளி குறித்து பேசும் போது கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை கருத்தில் கொள்வது நலம். விளையாட்டு, பாடல், கதைகள், செயல்பாடுகள் என கட்டமைக்கப்பட்ட இல்லம்தேடிக் கல்விமையங்கள் பள்ளி என்ற அமைப்பின் கற்றல் முறையில் இருந்து விலகி இருந்ததால் சமூகங்களின் நம்பிக்கைகள், மதிப்புகள் மற்றும் நடைமுறைகள் பொருத்து சில இடங்களில் தொய்வாகவும் இருந்துள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டே ஆரம்ப கட்டத்தில் சில கல்வியாளர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால், இத்திட்டத்தின் வெற்றி அவர்களையும் மூன்றாம்வெளி குறித்து சிந்திக்க வைத்திருக்கும்!
அதேநேரத்தில், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் குறைதீர் கற்பித்தல் செயல்பாட்டை மையங்களில் செயல்படுத்துவதன் வழி எதிர்பாளர்களின் அவசியமும் கருத்தில் கொள்ளப்பட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
குழந்தைகள் மையங்களில் கற்றுக் கொண்ட கதைகள், நாடகங்கள், பாடல்கள் குடும்பத்தில் பிரதிபலித்தன. இதனால், குடும்பங்கள் மையத்தின் மீது, நம்பிக்கை கொண்டனர். இவை குடும்பத்துடன் இணக்கமான உறவை வளர்த்தெடுக்க உதவின.
அதேநேரத்தில், இவை பள்ளிகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. அதன் விளைவு, மையமானது வீடு மற்றும் பள்ளி இவற்றிற்கிடையே ஒன்றுக் கொன்று சார்ந்து திகழ பாலமாக உதவின. அதேநேரத்தில், சுதந்திர அமைப்பாகவும் மையங்கள் இருந்து வருகின்றன.
மையங்கள் குழந்தைகள் பாலினம் மற்றும் இன வேறுபாடுகளைக் கடந்து நண்பர்களாக பழக வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது. இது சமூகத்திலும் பிரதிபலிக்கிறது. பள்ளிகளிலும் இது மேலும் வலுவூட்டப்படுகின்றது.
மையங்களில் நடக்கும் உரையாடல்கள் மற்றும் குழந்தைகள் எழுப்பும் கேள்விகள் குழந்தைகளின் சுதந்திரத்தை உறுதிசெய்வதுடன், குழந்தைகள் அளிக்கும் பதில்கள் சக குழந்தைகளுடன் இணக்கமாக பழக செயலூக்கம் அளித்தன.
இல்லம்தேடி மையங்கள் பல இடங்களில் கலாச்சார கலப்பினம் உருவாகக் காரணமாக இருந்துள்ளன. கலாச்சார அடையாளத்தின் ஆக்கப்பூர்வமான வடிவங்களை உருவாக்குவதில் இல்லம் தேடி மையங்கள் சான்றாக திகழ்கின்றன.
மையங்கள் குடும்பம் மற்றும் பள்ளி போன்ற குழந்தைகளின் உடனடி சூழலை இணைக்கும் பாலமாக இருந்து வருகின்றன.
மூன்றாம் இடைவெளி என்பது கருத்தியல் இடைவெளி ஆகும். அங்கு குழந்தைகளின் செயல்பாட்டிற்குள்ளும் (கதை, நடிப்பு, பாட்டு, நாடகம், விளையாட்டு, …) அதைப்பற்றிய அறிவும் ஒன்றிணைக்கப்படுகின்றது.
இதனால், முதல் மற்றும் இராண்டாவது இடைவெளிக்கு இடையில் மாற்றத்தை எளிதாக்குவதற்கு மூன்றாம் இடைவெளி உதவுகின்றது. இதனால், குழந்தைகள் வீடு,பள்ளி மற்றும் சமூக அனுபவங்கள் மூலம் அறிவை பெருக்கிக் கொள்கின்றனர்.
மூன்றாவது இடம் கருத்தியல் இடமாக அடையாளம் காணப்படுகின்றது, ஏனெனில், அங்கு குழந்தைகள் கருத்துகள், படைப்புகள் மற்றும் யோசனைகள் அனுமதிக்கப்படுகின்றன.
தன்னார்வலரின் உதவியுடன் குழந்தைகள் கற்றுக் கொள்வதால், குழந்தைகள் தங்களுக்கு இடையே ஏற்படும் ஆதரவுகள் / முரண்பாடுகள் இடையேயும் புதிய புரிதலையும் அறிவையும் உருவாக்குவதற்கு மையங்கள் உதவி வருகின்றன.
பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் இம்மையங்களுக்கு வரும் போது சக மாணவர்கள் உதவியுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். இதனால், முதல் மற்றும் இரண்டாம் இடங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்கின்றன.
ஆகவே, மூன்றாம் இடம் என்பது குழந்தைகளை வீடு மற்றும் பள்ளிஆகியவற்றுடன் இணைப்பதற்கான ஒரு இடம் என்ற புரிதலுடன் செயலபட வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் பள்ளி என்ற கட்டமைப்பு இல்லாமல் மூன்றாம் இடம் இருக்க வாய்ப்பு இல்லை.
பள்ளியை விட்டு விலகுதல் என்பதும் தோல்வியில் முடிவடையும். முடிவடைந்துள்ளது. ஆகவே, இல்லம் தேடிக் கல்வித் திட்டம் அரசால் கைவிடப்பட்டாலும், அதனைத் தொடர்ந்து மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட வைப்பதன் மூலம் குடும்பத்திற்கும் பள்ளிக்கும் பாலமாக திகழ வைப்பதுடன் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்புடையதாக்கலாம்.
க.சரவணன், தலைமையாசிரியர், மதுரை.
Leave a Reply