போதைப்பொருள் தொடர்பான வழக்கில் நடிகைகள் ரகுல்பிரீத் மற்றும் சார்மி நேரில் ஆஜர்
நடிகை ரகுல்பிரீத் சிங்
போதைப்பொருள் தொடர்பான வழக்கில் நடிகைகள் ரகுல்பிரீத் சிங் மற்றும் சார்மி நேரில் ஆஜர்
போததைப்பொருள் தொடர்பான வழக்கில் நடிகைகள் ரகுல்பிரீத்சிங் மற்றும் சார்மி ஆகியோரை அமலாக்கத்துறை முன்பு நேரில் ஆஜபடுத்தினர். போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கடந்த 2017 ஆம் ஆண்டு சோதனை நடத்தப்பட்டது.
போதைப்பொருள் வழக்கு
போதைப்பொருள் தொடர்பான வழக்கில் ரகுல்பிரீத் சிங் நேரில் ஆஜரானார். இதில் பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் நடிகைகள் சார்மி, ரகுல்பிரீத் சிங் உட்பட 12 பேருக்கு போதைபொருள் பயன்படுத்தியதில் தொடர்புடையதாக தெரியவந்தது.
இந்நிலையில் இந்த மனு நேற்று விசாதணைக்கு வந்தது. இதில் பல கோடி ரூபாய் ஹவாலா பணம் கைமாறி இருக்கலாம் என்பதால் அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் நடிகைகள் ராகுல் ப்ரீத் சிங், இயக்குனர் பூரி ஜெகநாத் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நடிகை சார்மி அமலாக்கத்துறை முன்பு நேற்று முன்தினம் ஆஜராகி விளக்கம் அளித்தார். நடிகை ராகுல் பிரித் சிங் நேற்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.











