பெண்கள் நெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பது ஏன்? இதுதான் அதன் ரகசியம்

Share Button
பெண்கள் நெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பது ஏன்? இதுதான் அதன் ரகசியம்…
பெண்களும் குங்குமமும்
நமது தமிழ்நாட்டின் பாரம்பரியத்தில் முக்கிய ஒரு தகவலாக போற்றப்படுவது, பெண்கள் நெற்றி வகிட்டில் பொட்டு வைப்பது ஒரு மரபாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பெண்கள் வட்டமாக வைப்பது பொட்டு என்றும், ஆண்கள் நேர்கோடாக வைப்பது திலகம் என்றும் அழைக்கப்படுகின்றது. வெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பதன் மூலம் சுமங்கலியாக இருப்பதை உணர்த்தவே இதன் பொருள் என்றும் கருதப்படுகிறது.
நெற்றி வகிட்டில் குங்குமம்
திருமணமான பெண்கள் தங்களது நெற்றியில் வகிடுகளுக்கு மத்தியில் குங்குமம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது மங்கள சின்னமாக கருதப்படுகிறது. சுமங்கலி பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை அதிகரிக்க செய்கிறது என நம்பப்படுகிறது. மேலும், உற்றார் உறவினர்களின் விஷேசங்களுக்கு பெண்கள் செல்லும்போது கணவன்மார்களுடன் மனைவி செல்லும்போது மங்களகரமாக நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
நெற்றியில் குங்குமம் வைத்திருக்கும் பெண்கள் சௌபாக்கியவதியாக கருதப்படுகிறாள். குங்குமம் பெண்ணிற்கு பார்வதியின் சக்தியை தருவதாக நம்பப்படுகிறது. பெண்கள் கடவுளின் அவதாரம் என்றும் கருதப்படுவார்கள்.
நெற்றியில் குங்குமம் வைப்பதனால் கிடைக்கும் நன்மைகள் :
ஆண்கள் :
குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் வைப்பது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். கட்டை விரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவை கொடுக்கும்.
குருவிரல் எனப்படும் ஆள்காட்டி விரலால் குங்குமத்தை வைத்துக்கொள்வது நிர்வாகத் திறன் மற்றும் ஆளுமை திறனை ஊக்குவிக்கும். சனிவிரல் எனப்படும் நடுவிரலில் குங்குமம் இட்டு கொள்வது தீர்க்காயுளைக் கொடுக்கும். மோதிர விரலால் குங்குமம் தரிப்பது துணிவு, நேர்மையுடன் செயல்படும் பண்பைத் தரும்.
பெண்கள் :
சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். இந்த இடம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் ஆகும். சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில்தான் உள்ளது.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
பெண்கள் தலை வகிடிலும், மாங்கல்யத்திலும், நெற்றியிலும் பொட்டு வைக்கிறார்கள். இந்த மூன்று இடங்களிலுமே லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். கோவில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டு கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பது கூடாது. வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவே போட சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *