நெகிழிக்குப்பைகளைக் களைந்தெறிவோம்!

Share Button
நெகிழிக்குப்பைகளைக்  களைந்தெறிவோம்!
************************************
 
நிலப்பரப்பின் சூழலில் மனிதவள மேம்பாடு – நாம் 
உலவுகின்ற காற்றினில் சுவாசத்தின் வெளிப்பாடு 
அணிகின்ற உடையாலே உள்ளத்தில் கூப்பாடு – நம்  
பிணியற்ற வாழ்வுதனில் மிளிரும் மெய்ப்பாடு 
 
பருத்தி உடையணியும் மனமெங்கும் மகிழ்வு – இனி 
பன்னாட்டு மோகமதில் மதியிழந்தால் தாழ்வு 
தாய்மொழிக் கல்வியதில் கனியும் எதிர்காலம் – நம் 
தரணியிலே தழைக்கும் மனிதம் முக்காலம் 
 
நீர்வழி ஆதாரம் வழிகாணும் விவசாயம் – இனி 
வேர்விடும் தன்னிறைவில் எப்போதும்  முப்போகம் 
நதிநீர் இணைப்பினிலே தீர்ந்துவிடும் பஞ்சம் – நம் 
விதிமாற்ற முன்னெடுப்போம் மகிழவே மிஞ்சும் 
 
நிலமடந்தை தலைநிமிர்ந்து நடந்திடவே நாளும்  – இனி 
நெகிழிக்குப்பைகளைக்  களைந்தெறிவோம் கேளும் 
தூயமிகு வீதிகளில் துன்பமின்றி வாழ்ந்திடுவோம் – நல்ல  
நேயமிகு  சொல்லெடுத்துப்  பகன்றிடுவோம் என்றும்
…………………………… 
கா.ந.கல்யாணசுந்தரம் 
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.